About

எமது நோக்கம்

30 வருடமாக தாயக மண்ணில் இடம்பெற்ற யுத்தம், தமிழர்களை பல வழிகளிலும் துன்புறுத்தியிருக்கிறது. அதன் ஆறாத வடு இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தாயகமண்ணில் இன்றும் பல ஆயிரம் பேர் குடியிருக்க வீடில்லாமல், வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல வழிதெரியாது, ஒரு நேர உணவின்றி, பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலையில் என்று பல துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருகிறார்கள்.
தங்களுடைய பிள்ளைகளை தாயக மண்ணில் விதைத்துவிட்டு, தங்களுடைய இறுதிக்காலத்தை கொண்டு நடத்துவதில் அவர்கள் படும் துயரம் படுபயங்கரம். கண்ணீருடனும், வறுமையுடனும், பசியுடனும் நாட்களை நகர்த்திவரும் அந்த முதியவர்களை பற்றி இலங்கை அரசாங்கமோ அல்லது தமிழ்த் தலைமைகளோ கவனத்தில் கொண்டதாக இல்லை.
அந்த அடிப்படையில், தாயகமண்ணில் உறவுகளை இழந்து, பிள்ளைகளை இழந்து துன்ப, துயரங்களுக்குள் வாழ்ந்து வரும் மூதாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு ரொரன்டோவில் இருந்து வெளிவரும் வியாபாரத் தகவல் கையேடு 'ஈழமுரசு - உலகத்தமிழர் வாணிபம்" (2019 முதல் வெளியீடு) நிறுவனம் முன்வந்தது.
இந்த உதவி பாதியில் நின்றுவிடும் திட்டமல்ல. அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடனேயே பயணிக்கவிருக்கும் திட்டமாகும். இந்த திட்டம் தாயகமண்ணில் உறவுகளை இழந்து அல்லற்படும் அனைத்து பெற்றோர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே 'ஈழமுரசு - உலகத்தமிழர் வாணிபம்" நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த உதவித்தொகை மாதா மாதம் அந்த பெற்றோர்களுக்கு தங்குதடையின்றி செல்லவேண்டும் என்பதில் 'ஈழமுரசு - உலகத்தமிழர் வாணிபம்" கண்ணும்கருத்துமாக செயற்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த உதவித் திட்டம் மேலும் வளர்ச்சி பெற்று தாயக மண்ணில் உதவியின்றி அல்லல்படும் பல ஆயிரம் பெற்றோர்களுக்கு ஆறுதல் அளிக்க, உலகெங்கிலும் உள்ள எமது தாயக உறவுகளிடமிருந்து முழுமையான ஆதரவை 'வாணிபம்" நிறுவனம் வேண்டி நிற்கிறது.
மேலும் எமது விளம்பரதாரர்களின் நலன்கருதி இன்றைய தொழில்நுட்பத்திற்கேற்ப எமது 'வாணிபம்" வெளியீட்டில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் அனைத்தும்www.thamilarvaanipam.com என்ற எமது இணையத்தளத்திலும் வெளியிடப்படும் என்பதையும் இங்கு அறியத்தருகின்றோம்.


Published By:
Eelamurasu - Ulagathamilar
Vannipam
2022

About

எமது நோக்கம்

30 வருடமாக தாயக மண்ணில் இடம்பெற்ற யுத்தம், தமிழர்களை பல வழிகளிலும் துன்புறுத்தியிருக்கிறது. அதன் ஆறாத வடு இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தாயகமண்ணில் இன்றும் பல ஆயிரம் பேர் குடியிருக்க வீடில்லாமல், வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல வழிதெரியாது, ஒரு நேர உணவின்றி, பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலையில் என்று பல துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருகிறார்கள்.
தங்களுடைய பிள்ளைகளை தாயக மண்ணில் விதைத்துவிட்டு, தங்களுடைய இறுதிக்காலத்தை கொண்டு நடத்துவதில் அவர்கள் படும் துயரம் படுபயங்கரம். கண்ணீருடனும், வறுமையுடனும், பசியுடனும் நாட்களை நகர்த்திவரும் அந்த முதியவர்களை பற்றி இலங்கை அரசாங்கமோ அல்லது தமிழ்த் தலைமைகளோ கவனத்தில் கொண்டதாக இல்லை.
அந்த அடிப்படையில், தாயகமண்ணில் உறவுகளை இழந்து, பிள்ளைகளை இழந்து துன்ப, துயரங்களுக்குள் வாழ்ந்து வரும் மூதாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு ரொரன்டோவில் இருந்து வெளிவரும் வியாபாரத் தகவல் கையேடு 'ஈழமுரசு - உலகத்தமிழர் வாணிபம்" (2019 முதல் வெளியீடு) நிறுவனம் முன்வந்தது.
இந்த உதவி பாதியில் நின்றுவிடும் திட்டமல்ல. அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடனேயே பயணிக்கவிருக்கும் திட்டமாகும். இந்த திட்டம் தாயகமண்ணில் உறவுகளை இழந்து அல்லற்படும் அனைத்து பெற்றோர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே 'ஈழமுரசு - உலகத்தமிழர் வாணிபம்" நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த உதவித்தொகை மாதா மாதம் அந்த பெற்றோர்களுக்கு தங்குதடையின்றி செல்லவேண்டும் என்பதில் 'ஈழமுரசு - உலகத்தமிழர் வாணிபம்" கண்ணும்கருத்துமாக செயற்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த உதவித் திட்டம் மேலும் வளர்ச்சி பெற்று தாயக மண்ணில் உதவியின்றி அல்லல்படும் பல ஆயிரம் பெற்றோர்களுக்கு ஆறுதல் அளிக்க, உலகெங்கிலும் உள்ள எமது தாயக உறவுகளிடமிருந்து முழுமையான ஆதரவை 'வாணிபம்" நிறுவனம் வேண்டி நிற்கிறது.
மேலும் எமது விளம்பரதாரர்களின் நலன்கருதி இன்றைய தொழில்நுட்பத்திற்கேற்ப எமது 'வாணிபம்" வெளியீட்டில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் அனைத்தும்www.thamilarvaanipam.com என்ற எமது இணையத்தளத்திலும் வெளியிடப்படும் என்பதையும் இங்கு அறியத்தருகின்றோம்.


Published By:
Eelamurasu - Ulagathamilar
Vannipam
2022